291. நிட்டை-உறைத்து நிற்றல்; அசையாது நிற்றல். இஃது இறைவனிடத்து நிற்றலேயாம். நிற்பது உயிரேயாயினும், அதற்குத் துணையாவது உடலாகலின், அதனை உடன் மேல் ஏற்றி, துணைசெய்யாத உடலை, ‘‘நிட்டை இலா உடல்’’ என்றார். ‘‘நீத்து’’ என்றது, ‘மாற்றி’ என்றபடி. அஃதாவது, ‘நிட்டைக்குத் துணை செய்வதாக ஆக்கி’ என்றதாம். ‘‘என்னை ஆண்ட’’ எனத் தமக்கு அருள்செய்ததையே கூறினார், தம் கீழ்மை காரணமாகத் தமக்கு அருள்புரிந்ததே பெரும் புகழாவது’ என்பது பற்றி. ‘சிட்டனாகிய சிவன்’ என உரைத்து’ ‘தன்னடியாரை எனச் சொல்லெச்சம் வருவிக்க. ‘‘திறங்களுமே’’ என்ற ஏகாரம் உலகியலைச் சிந்தித்தலை விலக்கிற்று. |