சொல்லகராதிச் சுருக்கம்

6. வேணாட்டடிகள் திருவிசைப்பா

21. கோயில்


211.

மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு வானவர்க்கும்
கண்ணாவாய் கண்ணாகா தொழிதலும்நான் மிகக்கலங்கி
அண்ணாவோ என்றண்ணாந் தலமந்து விளித்தாலும்
நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.    (7)
 

211.  ஒடுக்கள், எண்ணிடைச்   சொல்.   ‘மண்ணின்கண்  அளவும்
(பொருந்திய)  மனிதர்க்கும்,  விண்ணின்கண்  அளவும்  வானவர்க்கும்’
என       நிரல்நிரை       வந்தது.       கண்   -    களைகண்’

பற்றுக்கோடு     ‘எனக்கு அவ்வாறு    ஆகாதொழிந்தமையால்; என்க.
‘அண்ணல்’  என்பது  னகர  ஈறாய்த்  திரிந்து  விளியேற்பது பிற்கால
வழக்கு.      அண்ணல்-பெருமை        யுடையவன்;     தலைவன்.
அண்ணாந்து-ஆகாயத்தை நோக்கி நின்று. அலமந்து-வருந்தி. 


மேல்