7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
25. கோயில்
252. | நினைத்தேன் இனிப்போக்குவனோ நிம லத்திரளை நினைப்பார் மனத்தினு ளேயிருந்த மணி யைமணி மாணிக்கத்தைக் கனைத்திழி யுங்கழனிக் கன கங்கதிர் ஒண்பவளம் சினத்தொடு வந்தெறியுந் தில்லை மாநகர்க் கூத்தனையே. (6) |
252. ‘‘நிமலத்திரளை’’ என்பது முதலாகத் தொடங்கிப் பூட்டு வில்லாக முடிக்க. நிமலத் திரள்-தூய்மையின் மிகுதி. ‘‘மனத்தினுளே இருந்த மணி’’ என்றது அற்புத உருவகம். பின்னர் வந்த மணி, அழகு. ‘‘மணியை’’ எனவும், ‘‘மாணிக்கத்தை’’ எனவும் வேறு வேறாகக் கூறினாராயினும், ‘மாணிக்க மணியை’ என்பதே கருத்தென்க. கனைத்து-ஒலித்து. கனகம்-மிக்க நீர். ‘‘கழனி’’ என்பதன்றி, ‘கனநீர்’ என்பதே பாடம் போலும்! கனம்-மேகம்.‘‘சினத்தொடு வந்து’’ என்றது, தற்குறிப்பேற்றம். |