9. சேதிராயர் திருவிசைப்பா
28. கோயில்
284. | மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பனென் றோதில் உய்வன்ஒண் பைங்கிளி யேஎனும்; சேதித் தீச்சிரம் நான்முக னைத்தில்லை வாதித் தீர்என்ம டக்கொடியையே (6) |
284. ‘ஒண் பைங்கிளியே, மாதொர் கூறன், கொன்றை மார்பன் என்றாற்போலத் தில்லையானது பேச்சினை நீ பேசினால் நான் உய்வேன்; (இல்லாவிடில் உய்யமாட்டேன்) என்று கிளியிடம் சென்று வேண்டுவாள்’ என்க. வண்டு ஆர்-வண்டுகள் ஆர்க்கின்ற (ஒலிக்கின்ற) ; ‘நிறைந்த’ என்றலுமாம். ‘நான் முகனைச் சிரம் சேதித்தீர்’ என மாற்றுக. சேதித்தீர்-அறுத்தவரே. ‘சிரம் சேதித்தீர்’ என்றது. ‘ஒறுத்தீர்’ என்னும் பொருட்டாய். ‘நான்முகனை’ என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. ‘தில்லைக்கண் நின்று வாதித்தீர்’ என்க. வாதித்தீர்-வருந்தப் பண்ணினீர். ‘இது தகுமோ’ என்பது குறிப்பெச்சம். இத்திருப்பாட்டின் ஈற்றடி இறுதிச்சீர் வேறுபட்டு வந்தது. |