3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
| 101. | தளிரொளி      மணிப்பூம் பதம்சிலம் பலம்பச் சடைவிரித் தலையெறி கங்கைத்
 தெளிரொளி மணிநீர்த் திவலைமுத் தரும்பித்
 திருமுகம் மலர்ந்துசொட் டட்டக்
 கிளரொளி மணிவண் டறைபொழிற் பழனங்
 கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
 வளரொளி மணியம் பலத்துள் நின்றாடும்
 மைந்தன்என் மனங்கலந் தானே.                     (1)
 
 | 
| 
 101.     தளிர்  ஒளி-தளிர்போன்ற  ஒளியையுடைய.             மணிப்பூம்பதம்-அழகிய  மலர்போலும்  திருவடியில்.  அலம்ப-ஒலிக்க.       தெளிர்
 ஒளி  மணி  நீர்த்திவலை-தெளிவான  ஒளியை      யுடைய அழகிய நீர்த்
 துளிகள்.  முத்து  அரும்பி-முத்துப்போலத் தோன்ற. அரும்ப      என்பது
 ‘‘அரும்பி’’  எனத்  திரிந்தது. சொட்டு அட்ட-துளிகளைச் சிந்த, துளி,
 வியர்வைத் துளி. ‘சொட்டட்ட ஆடும் ’ என இயையும். பழனம்-வயல்,
 ‘பொழிலும்   பழனமும்  கம்பலை  செய்யும்  கீழ்க்கோட்டூர்’  என்க.
 கெழுவு-பொருந்திய.  கம்பலை-ஆரவாரம்.  ‘கம்பலம்’ என்பது      பாடம்
 அன்று.    பொழிலிலும்,         பழனத்திலும்    உள்ளவை       செய்கின்ற
 ஆரவாரத்தை     அவையே          செய்வனவாக்க              கூறினார்.
 மணிஅம்பலம்-மாணிக்கச்        சபை.   மைந்தன்-வலிமை   (தளராமை)
 உடையவன்       ஈற்றில்,  ‘இஃதென்ன  வியப்பு’  என்னும்      குறிப்பெச்சம்
 வருவித்து முடிக்க.
 |