2. சேந்தனார் திருவிசைப்பா
5. திருவீழிமிழலை
| 50. | ‘இத்தெய்வ நெறிநன்’ றென்றிருள் மாயப் பிறப்பறா இந்திர சாலப்
 பொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த
 புராணசிந் தாமணி வைத்த
 மெய்த்தெய்வ நெறிநான் மறையவர் வீழி
 மிழலைவிண் ணிழிசெழுங் கோயில்
 அத்தெய்வ      நெறியிற் சிவமலா தவமும்
 அறிவரோ      அறிவுடை யோரே!                       (5)
 
 | 
| 
 50.    இருள்-அறியாமை.   மாயம்-நிலையாமை  ‘இவற்றையுடையபிறப்பு’         என்க.    அறா  -   அறுத்து          உய்விக்க   மாட்டாத.
 | 
| இம்மாட்டமை     உடையவாயினும்,    மாட்டுவபோலச்  சொற்சாலம்செய்தல்  பற்றி,  ‘‘இந்திர  சால  நெறி’’ என்றார்.  ‘‘பொய்’’  என்றது
 போலியை.    ‘பொய்த்    தெய்வங்களைக்கொண்ட   நெறி’    என்க.
 புரிந்த-இடைவிடாது  நின்று அருள்செய்த. புராண சிந்தாமணி- பழைய
 (எல்லாப் பொருட்கும்  முன்னே     உள்ள)    சிந்தாமணி;  என்றது.
 சிவபெருமானை. வைத்த-அமைத்த.  ‘மெய்த்  தெய்வ  நெறியையுடைய
 நான்மறையோர்’ என்க. கோயிற்கண் உள்ளதும், அத்தெய்வ நெறிக்கண்
 விளங்குவதும்  ஆகிய    சிவம்’    என்க.    அவம் - பயனில்லாத
 பிறபொருள்கள். அறிவரோ-பொருளாக நினைப்பரோ! நினையார்.
 |