சொல்லகராதிச் சுருக்கம்

4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா

19. கோயில்


188.

எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டெமையாளும்
சம்பந்தன் காழியர்கோன் றன்னையும்ஆட்கொண்டருளி
அம்புந்து கண்ணாளுந் தானும்அணி தில்லைச்
செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை யாயிற்றே.  (4)
 

188.    ‘எம் வினைநோய்’ என இயையும், ‘பந்த வினை வல்வினை’
எனத்    தனித்தனி   இயைக்க.    பந்தம்-கட்டு.   திருப்பதிகங்களை
வினைதீர்தற்கு    வழியாகத்      திருக்கடைக்காப்பு   அருளிச்செய்து
சென்றமையின், ‘‘எம் பந்த வல்வினைநோய்  தீர்த்திட்ட எமை ஆளும்
சம்பந்தன்’’ என்றார். அம்பு உந்து-அம்புபோலப்  பாய்கின்ற. ‘‘தானும்’’
எனப் படர்க்கையாகக் கூறினார். ‘‘தான்’’ என்றது,  கூத்தப்பெருமானை.
இடரின்றி உணர்த்தும் என்க. ‘கண்ணாளும் தானும்  சேர்ந்து இருக்கை
தில்லை  அம்பலமே ஆயிற்று’ என மாறிக் கூட்டுக. ‘செம்பொன்னால்’
என உருபு விரிக்க. இருக்கை-இருக்கும் இடம்.


மேல்