சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

23. கோயில்


230.

வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன்
   மலரவன் முடிதேடி
எய்த்து வந்திழிந் தின்னமுந் துதிக்கின்றார்
   எழில்மறை யவற்றாலே

செய்த்த லைக்கம லம்மலர்ந் தோங்கிய
   தில்லையம் பலத்தானைப்
பத்தியாற் சென்று கண்டிட என்மனம்
   பதைபதைப் பொழியாதே.                      (5)
 


230. வைத்த-ஒளித்து   வைத்த.   ‘‘துதிக்கின்றார்’’  என்றதன்பின்
‘அவ்வாறாக’            என்பது     வருவிக்க.    ‘துதிக்கின்றான்’
என்பது   பாடம்  அன்று.    செய்த்தலை-வயலிடத்து.  பத்தி-ஆசை.
‘பத்தியால்  ஒழியாது’  என இயையும். பதைபதைத்தல்-மிக  விரைதல்.
‘பதைபதைத்தலை  ஒழியாது’   என்க.   ‘இது   கூடுவதோ’  என்பது
குறிப்பெச்சம்.


மேல்