சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

3. கோயில்


27.

‘செழுந்தென்றல், அன்றில், இத் திங்கள், கங்குல்,
திரைவீரை, தீங்குழல், சேவின்மணி
எழுந்தின்றென் மேற்பகை யாட வாடும்
எனைநீ நலிவதென் ! என்னே ! ’ என்னும் ;
‘அழுந்தா மகேந்திரத் தந்தரப்புட்
கரசுக் கரசே ! அமரர்தனிக்
கொழுந்தே! ’ என்னும் ; ‘குணக் குன்றே! ’ என்னும் ;
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.              (5)
 

27.     அன்றில்,   துணைபிரியாப்   பறவை.   திங்களைக்காட்டி,
‘‘இத்திங்கள்’’   என்றாள்.   திரை   வீரை- அலைகளையுடைய கடல்.
சே-எருது. தென்றல் முதலியவை காமநோய்  கொண்டாரை வருத்துவன.
பகையாடுதல்-  பகைகொண்டு நிற்றல். அழுந்தா மகேந்திரம்- அழியாத
மகேந்திர  மலை.  ‘‘மகேந்திரத்து’’  என்றதனை,  பின் வரும் தொடர்
ஒருபெயர்த்   தன்மைப்பட்டு   நின்று  முடிக்கும். ‘‘புட்கரசு’’ என்றது, 
கலுழனை;   அதற்கு   அரசன்   திருமால்,    ‘‘கொழுந்து’’  என்றது,
‘தலையாயவன்’ என்னும் பொருட்டு.


மேல்