சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

5. திருவீழிமிழலை


53.

ஆயிரங் கமலம்ஞாயிறா யிரமுக்
   கண்முக கரசர ணத்தோன்,
பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த
   படர்சடை மின்னுபொன் முடியோன்,
வேயிருந் தோளி உமைமண வாளன்
   விரும்பிய மிழலைசூழ் பொழிலைப்
போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்
   போற்றுவார் புரந்தரா திகளே.                  (8)
 

53.     கண் முதலியவற்றை எதிர்நிரனிறையாக்கி, கண் ஒன்றற்கும்
ஞாயிற்றை     உவமையாகவும்,     ஏனையவற்றிற்குக்    கமலத்தை
உவமையாகவும்   கொள்க.   கண்களை,  ‘‘ஆயிர  ஞாயிறு’’ என்றது
ஒளிமிகுதி    பற்றி.    கரம்-கை.    சரணம்-பாதம்.   பாய்   இருங்
கங்கை-பாய்ந்தோடுகின்ற     பெரிய     கங்கை.    பனி- குளிர்ச்சி.
கரந்த-மறைத்த.  படர்-விரிந்த.  சடையாகிய பொன்முடியோன்’  என்க.
‘‘போய்’’  என்றது, ‘அடைந்து’ என்றபடி. ‘திருவீழிமிழலைக் கோயிலை
அடைந்து   போற்றாவிடினும்,   அதனைச்   சூழ்ந்துள்ள  பொழிலை
அடைந்தேனும் போற்றுவாரது கழல்களைப் போற்றுவார்  புரந்தராதியர்
ஆவர்’ என்றார், புரந்தரன்-இந்திரன்.


மேல்