7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
24. கோயில்
| 239. | சந்தும்      அகிலும் தழைப்பீ லிகளும்சாதி பலவுங்கொண்
 டுந்தி யிழியும் நிவவின் கரைமேல்
 உயர்ந்த மதில்தில்லைச்
 சிந்திப் பரிய தெய்வப் பதியுள்
 சிற்றம் பலந்தன்னுள்
 நந்தி முழவம் கொட்ட நட்டம்
 நாதன் ஆடுமே.                               (4)
 
 | 
| 
 239. தழைப்         பீலி-தழைபோன்ற மயில் தோகை. சாதி  ஒருவகைமரம்;   இதன்   காய்  சிறந்ததொன்றாகக்  கொள்ளப்படுதல்        அறிக.
 கொண்டு-அகப்படக்  கொண்டு, உந்தி இழியும்-தள்ளி ஓடுகின்ற.       நிவா,
 ஓர்   யாறு.   ‘கரைமேல்   விளங்கும்   தில்லை’   என         உரைக்க.
 ‘தில்லையாகிய   தெய்வப்பதி’   என்றவாறு.  ‘‘சிந்திப்பரிய’’        என்றது.
 ‘சிந்தனையுள் அடங்காத பெருமையை உடைய ’ என்றபடி.
 |