3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
17. திருவிடைமருதூர்
| 173. | வெய்யசெஞ்      சோதி மண்டலம் பொலிய வீங்கிருள் நடுநல்யா மத்தோர்
 பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து
 பாவியேன் காதல்செய் காதில்
 ஐயசெம் பொன்தோட் டவிர்சடை மொழுப்பின்
 அழிவழ கியதிரு நீற்று
 மையசெங் கண்டத் தண்டவா னவர்கோன்
 மருவிடந் திருவிடை மருதே.                         (1)
 
 | 
| 
 173.          முதலடியை இறுதியடியின்முன் கூட்டுக. ‘ஓர்      பாந்தள்’ எனஇயையும்.     பைய-படத்தை          யுடைய.                பாந்தள்-பாம்பு.
 உமிழ்ந்து-உமிழ்தலால்;  இது,  ‘‘காதல்       செய்’’  என்பதனோடு முடியும்.
 ‘சிவபெருமானது       திருச்செவியில் செம்பொன்   தோடேயன்றிப் பாம்பும்
 குழைபோல         உள்ளது’    என்க.   ஐய-அழகிய.         மொழுப்பு-முடி.
 ‘மொழுப்பினால்        அழிகின்ற   அழகிய   திருநீறு’       என்க.   திருநீறு
 அழிதற்குக்  காரணம்  முன்னே       (பாட்டு-170)  கூறப்பட்டது.        வெய்ய
 செஞ்சோதி        மண்டலம்-ஞாயிற்று  மண்டலம்.  ‘ஞாயிற்று             மண்டலம்
 விளங்க  அதனிடையே  மிக்க  இருளையுடைய       நள்ளிரவும்       உள்ளது
 போலத்  தோன்றுகின்ற       கரிய  நிறத்தை  ஒருபுடைகொண்ட             சிவந்த
 கழுத்து’  என்க.  மைய-கருநிறத்தையுடைய.        ‘செம்பொற்றோட்டையும்,
 அழகிய திருநீற்றையும்,      செங்கண்டத்தையும் உடைய கோன்’ என்க.
 |