7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
24. கோயில்
| 240. | ஓமப்      புகையும் அகிலின் புகையும்உயர்ந்து முகில்தோயத்
 தீமெய்த் தொழிலார் மறையோர்மல்கு
 சிற்றம் பலந்தன்னுள்
 
 வாமத்      தொழிலார் எடுத்த பாதம்மழலைச் சிலம்பார்க்கத்
 தீமெய்ச் சடைமேல் திங்கள் சூடித்
 தேவன் ஆடுமே.                                 (5)
 
 | 
| 
 240. ‘‘தீ     மெய்த் தொழில்’’ என்றதை. ‘மெய்த்      தீத்தொழில் எனமாற்றி,  ‘மெய்த்  தொழில்,  தீத்தொழில்’  எனத்  தனித்தனி  முடிக்க.
 மெய்ம்மை - என்றும் ஒழியாமை. தீத்தொழில்-தீயை ஓம்பும்        தொழில்;
 வேள்வி  வேட்டல்.  வாமம்-இடப்பக்கம்.  ‘எடுத்த  எழில்       ஆர் வாம
 பாதம்’ என மாற்றிக்      கொள்க. இறைவன், வலத் திருவடியை  ஊன்றியும்,
 இடத்திருவடியைத்       தூக்கியும்  நடனம்  செய்தல் அறிக.        ‘ பாதத்தின்
 கண்’  என  உருபு  விரிக்க.       மழலை-இனிய  ஓசையை        உடைய.  தீ
 மெய்-நெருப்புப்போலும்      நிறத்தை யுடைய.
 |