சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

2. கோயில்


22.

காமனக் காலன், தக்கன்,மிக் கெச்சன்
   படக்கடைக் கணித்தவன் அல்லாப்
பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர்
   தொண்டனேன் பெரும்பற்றப் புலியூர்ச்
சேமநற் றில்லை வட்டங்கொண் டாண்ட
   செல்வச்சிற் றம்பலக் கூத்தா!
பூமல ரடிக்கீழ்ப் புராணபூ தங்கள்
   பொறுப்பர்என் புன்சொலின் பொருளே.           (11)

திருச்சிற்றம்பலம்
 


22.  ‘மிகை செய்த’ என்னும் பொருட்டாகிய ‘மிக்க’ என்பதன் ஈற்று
அகரம்   தொகுத்தல்   பெற்றது.  ‘‘கடைக்   கணித்தவன்’’   என்றது.
இடவழுவமைதி.   ‘கடைக்கணித்தவன்  தொண்டர்’’   என  இயையும்.
அல்லா-நன்றல்லாத.   பிறிந்த-நீங்கிய;  என்றது.   ‘நன்மனம்   பெற்ற’
என்றவாறு.   இதற்குப்  பிறவாறும்   உரைப்ப. ‘சிவப்பெருந்தொண்டர்

எனவும்   பாடம் ஓதுப. ‘‘தொண்டனேன்’’  என்பதன்பின், ‘‘ஆகலின்’’
என்னும்    சொல்லெச்சம்    வருவித்து,    அதனை,   ‘‘பொறுப்பர்’
என்பதனோடு  முடிக்க.  ‘புலியூராகிய  தில்லை’ என்க. சேமம்- காவல்.
வட்டம்-எல்லை.   கொண்டு-நினதாகக்   கொண்டு.  ஆண்ட-அதனை
ஆளுதல்   செய்த.   ‘பூவடி,  மலரடி’  எனத்  தனித்தனி   இயைக்க.
பூ-பொலிவு.   புராணம்-பழைமை.  பூதங்கள்  என்பது   சிவகணங்கள்
என்னும் பொருட்டாய் உயர் திணையாய் நின்றது.  


மேல்