சொல்லகராதிச் சுருக்கம்

6. வேணாட்டடிகள் திருவிசைப்பா

21. கோயில்


206.

தம்பானை சாய்ப்பற்றார் என்னும் முதுசொல்லும்
எம்போல்வார்க் கில்லாமை என்னளவே அறிந்தொழிந்
                                          [தேன்
வம்பானார் பணிஉகத்தி வழிஅடியேன் தொழில் இறையும்
நம்பாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.   (2)
 

206. ‘சாய’ என்பதன் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. தம் பானை
சாயப்    பற்றார்  -   ஒருவரும்   தங்கள்    பானையைக்    கீழே
விழுமாறு  பிடிக்கமாட்டார்கள்;   அஃதாவது,          ‘கருத்தின்றிப்

புறக்கணிப்பாகக்     கையாளார்’   என்பதாம்,   முதுசொல்-பழமொழி,
‘இறைவன்  தம்மைப்  புறக்கணித்துவிட்டான்’   என்னும் கருத்தினால் ’
அம்முதுசொல்     எம்போல்வார்க்கு    இல்லாமை    என்னளவிலே
அறிந்தொழிந்தேன்’  என்றார்.  ‘‘சொல்லும்’’  என்னும் உம்மை, சிறப்பு.
‘‘அறிந்தொழிந்தேன்’’  என்பது  ஒருசொல்  நீர்மைத்து, வம்பு ஆனார்
பணி   உகத்தி-புதியராய்  வந்து  அடியராயினாரது  தொண்டினையும்
விரும்புகின்ற  நீ  ‘பணியும்’ என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. வழி
அடியேன்   தொழில்   இறையும்  நம்பாய்- வழியடியேனாகிய  எனது
தொண்டினைச் சிறிதும் விரும்பவில்லை.  


மேல்