சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

23. கோயில்


234.

வான நாடுடை மைந்தனே யோஎன்பன்;
   வந்தருளாய் என்பன்;
பானெய் ஐந்துடன் ஆடிய படர்சடைப்
   பால்வண்ண னேஎன்பன்;
தேன மர்பொழில் சூழ்தரு தில்லையுள்
   திருநடம் புரிகின்ற
ஏன மாமணிப் பூண்அணி மார்பனே
   எனக்கருள் புரியாயே.                         (9)
 


234.     வான  நாடு-சிவலோகம்.  மைந்தன்-பேராற்றலுடையவன்.
‘வானநா  டுடையவனாயினும்  என்  பொருட்டு   இங்கு வந்து அருள்’
என்றவாறு.  பால்,  நெய்  முதலிய  ஐந்தையும் ஒருங்கு ஆடிய’ என்க.
ஏன  மா-பன்றியாகிய  விலங்கு;   இருபெயரொட்டு. அதனது மருப்பே
இறைவன்  மார்பில்  அணியாய்   நிற்றலின், ‘ஏனமாப் பூண்’ என்றார்.
மணி-அழகு. இது தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்.


மேல்