சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

7. திருவிடைக்கழி


73.

குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை
   படுமிடர் குறிக்கொளா தழகோ
மணமணி மறையோர் வானவர் வையம்
   உய்யமற் றடியனேன் வாழத்
திணமணி மாடத் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன்
   கணபதி பின்னிளங் கிளையே.                 (5)
 

73.  குண மணிக் குருளை-நற்பண்பினையுடைய சிறந்த வீரமுடைய
சிறுவன்;  முருகன். ‘‘குருளை’’ என்றது சிங்கக் குட்டியை. இஃது உவம
ஆகுபெயராய், அதுபோலும் சிறு வனைக்  குறித்தது. ‘குறிக்கொளாதது
என்பது   குறைந்து    நின்றது.  மணம்  அணி  மறையோர்- மங்கல
விழாக்களை    அழகு    படுத்துகின்ற  அந்தணர்.     மறையோரை
வையத்தாரினின்று வேறு பிரித்தது,  சிறப்புப் பற்றி.    ‘வாழ   நின்ற’
என   இயையும்.   ‘திண்ணம்’   என்பது இடைக்குறைந்து,  ‘‘திணம்’’
என  வந்தது,  ‘திண்மையாகிய மாடம்’ என்க. கண மணி-கூட்டமாகிய
இரத்தினங்களையுடைய.  இளங்கிளை - தம்பி.  


மேல்