3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9. கோயில்
100. | நீரணங் கசும்பு கழனிசூழ் களந்தை நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து நாரணன் பரவுந் திருவடி நிலைமேல் நலமலி கலைபயில் கருவூர் ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த அமுதம்ஊ றியதமிழ் மாலை ஏரணங் கிருநான் கிரண்டிவை வல்லோர் இருள்கிழித் தெழுந்த சிந்தையரே. (10)திருச்சிற்றம்பலம் |
100. நீர் அணங்கு அசும்பு-நீரினது அழகிய ஊறுதலையுடைய ‘ஆதித்தேச்சரத்துத் திருவடி நிலை’ என இயையும், ‘திருவடிக்கும் ஆகாது திருவடிநிலைக்கே ஆகும்’ என்பார், ‘‘திருவடிநிலைமேல் மொழிந்த’’ என்றார் ஆரணம் மொழிந்தவாய்-வேதம் ஓதியவாய் ; இவர் தம்மை வேதம் ஓதியவராகப் பின்னரும் குறிக்கின்றார். அமுதம் ஊறிய-அமுதம் சுரந்தது போல இனிமை வாய்ந்த. ‘தமிழ்மாலைக்கண் உள்ள இருநான்கு இரண்டு’ என்க. ஏர் அணங்கு-எழுச்சி பொருந்திய அழகினை யுடைய. இருநான்கு இரண்டு-பத்து ; பத்துப் பாடல்கள். இருள்-அறியாமை. சிந்தையர்- உள்ளத்தையுடையவராவர். |