3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
14. திருப்பூவணம்
| 146. 
 | கரைகடல்      ஒலியின் தமருகத் தரையிற் கையினிற் கட்டிய கயிற்றால்
 இருதலை ஒருநா இயங்கவந் தொருநாள்
 இருந்திடாய் எங்கள்கண் முகப்பே
 விரிதிகழ்      விழவின் பின்செல்வோர் பாடல்
 வேட்கையின் வீழ்ந்தபோ தவிழ்ந்த
 புரிசடை துகுக்கும் ஆவண வீதிப்
 பூவணம் கோயில்கொண் டாயே.                         (3)
 
 | 
| 
 146.          கரை-ஒலிக்கின்ற.  கடல்  ஒலியின்-கடல்       ஒலி  போன்றஒலியினையுடைய.  ‘‘தமருகத்து       அரையின்’’ என்பது முதல், ‘‘இயங்க’’
 என்பதுகாறும்       உள்ள பகுதியால் இறைவன் தனது  தமருகத்தினின்றும்
 ஒலியை      எழுப்பும் முறை விளக்கப்பட்டது. தமருகம்- உடுக்கை.       ‘அதன்
 அரைக்கும்       உனது கைக்குமாகக் கட்டப்பட்டுள்ள கயிற்றினால்       அதன்
 இருபக்கத்தும்    ஒருநாவே   சென்று        தாக்கி   ஒலியை         எழுப்ப,
 அந்நிலையோடே        எங்கள்  கண்களின்  முன்னே  ஒருநாள்             வந்து
 இருந்தருள்’  என்றவாறு.  விரி-விரிவு  ;      முதனிலைத் தொழிற்       பெயர்.
 ‘‘விழவு’’        என்றது,   அதிற்கூடும்   மக்கட்        கூட்டத்தினை. பாடல்
 பாடுவோர்  மக்கட்       கூட்டத்தின் நெருக்கத்திடையே செல்லாது பின்பு
 செல்லுதலின்,  ‘‘விழவின்பின்       செல்வோர்  பாடல்’’ என்றார். ‘விழவிற்
 பின்செல்வோர்        பாடல்’  எனப்  பாடம்  ஓதி  விழாவில்  ‘நின்பின்
 செல்வோரது        பாடல்   ;   என்று   உரைத்தலும்        ஆம்.   பாடல்
 வேட்கையின்-பாடல்மேல்       எழுந்த வேட்கையினால், ‘வீழ்ந்த புரிசடை,
 போது               அவிழ்ந்த      புரிசடை’         என்க.   ‘நின்புரிசடை’
 என        உரைக்க.          வீழ்ந்த    -        அவிழ்ந்த,     அடியாரது
 பாடலை     இறைவன்        இனிதாகக் கேட்டுத் தலையை அசைத்தலால்,
 கட்டியுள்ள அவனது சடை அவிழ்ந்து       வீழ்ந்தது.      துகுக்கும்- தூர்க்கின்ற
 ;  நிரம்பச்  சொரிகின்ற.  ‘‘போது        அவிழ்ந்த புரிசடை’’ என்றதனால்,
 சொரியப்படுவன  அப்போதுகளே       ஆயின. போது-பேரரும்பு ; அவை,
 கொன்றை, ஆத்தி முதலியவற்றின்        அரும்புகளாம். அவிழ்ந்த-மலர்ந்த.
 ‘விழாக் காலங்களில் இறைவனது சடைக்கண் உள்ள மலர்களே வீழ்ந்து
 நிரம்பும்  பெருமையை  உடையன, திருப்பூவணத்தின் கடை வீதிகள்’
 என்றவாறு.
 |