7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
24. கோயில்
246. | வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடமாடும் தேனார் பொழில்சூழ் தில்லை மல்கு சிற்றம் பலத்தானைத் தூநான் மறையான் அமுத வாலி சொன்ன தமிழ்மாலைப் பானேர் பாடல் பத்தும் பாடப் பாவம் நாசமே. (11) திருச்சிற்றம்பலம் |
246. மன்னி - என்றும் நின்று. பால் நேர்-பால்போலும் இனிமையுடைய. ‘நாசம்ஆம்’ என்னும் ஆக்கச் சொல் தொக்கது. ‘‘தூ நான் மறையான்’’ என்றதனால், இவர் மறையவர் குலத்தினராதல் விளங்கும். இது, முன்னைப் பதிகத்திலும் கூறப்பட்டது. |