| சொல்லகராதிச் சுருக்கம் | 
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
8. கோயில்
| 84. | கண்பனி      யரும்பக் கைகள் மொட்டித்தென் களைகணே ஓலமென் றோலிட் டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத் தென்னையும் புணர்ப்பவன் கோயில் பண்பல தெளிதேன் பாடிநின் றாடப் பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பிற் செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. (5) | 
| 84.     மொட்டித்து - குவிந்து. களைகணே -பற்றுக்கோடானவனே. | |
| மேல் |