சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

15. திருச்சாட்டியக்குடி


158.

செம்பொனே ! பவளக் குன்றமே ! நின்ற
   திசைமுகன் மால்முதற் கூட்டத்
தன்பரா னவர்கள் பருகும்ஆ ரமுதே !
   அத்தனே ! பித்தனே னுடைய
சம்புவே ! அணுவே ! தாணுவே ! சிவனே !
   சங்கரா ! சாட்டியக் குடியார்க்
கின்பனே ! எங்கும் ஒழிவற நிறைந்தேழ்
   இருக்கையில் இருந்தவா றியம்பே                (7)
 

158.     ‘பித்தனேனை’ என்னும் இரண்டனுருபு  தொகுத்தலாயிற்று.
சம்பு-இன்பத்தைத்    தோற்றுவிப்பவன்.     தாணு-அசைவில்லாதவன்.
சங்கரன்-இன்பத்தைச் செய்பவன். 


மேல்