சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

2. கோயில்


16.

நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்
   கிளங்கமு குளங்கொள்நீள் பலமாப்
பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதண
   முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச்
சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த
   செம்பொற்சிற் றம்பலக் கூத்தா!
பொறையணி நிதம்பப் புலியதள் ஆடைக்
   கச்சுநூல் புகுந்ததென் புகலே.                   (5)
 

16.    ‘நிறைந்த, தழைத்த வாழை’ என்க. ‘வாழை,  தெங்கு, கமுகு,
பலா,  மா  என்பவற்றின்மேல்  பிறை  தவழ்  பொழில்’   என்றவாறு.
இவற்றோடு  இயைபில்லாத  துகிற்  கொடியை இடை வைத்தார்; பிறை
தவழப்பெறுதலாகிய ஒப்புமை பற்றி. எனவே, அதனை முதலிற்  கூட்டி,
‘நிழற்கொடியோடு  ’  என  வேறுவைத்துரைக்க.  ‘பலா’  என்பது ஈறு
குறுகிநின்றது:      செய்யுளாதலின்      உகரம்பெறாது      வந்தது.
கிடங்கினை    (ச் சூழ) உடைய இடை மதில்’ என்க. பதணம் - மதில்.
உறுப்பு.  ‘தரளம்,  நித்திலம்’  என்பன முத்தின்  வகைகள். ‘அவற்றை
உடைய    செம்பொன்னால்    இயன்ற   சிற்றம்பலம்’    என்றவாறு.
இத்திருப்பாட்டினின்றும்   சிலர்.   ‘கூத்த’  என்றே   பாடம்  ஓதுவர்.
நிதம்பம்-அறை.  பொறை  அணி-உடைக்குக் காப்பாக  அணியப்பட்ட
கச்சு   நூல்’   என்க.   ‘பொறையாக’   என   ஆக்கம்   வருவிக்க.
புகல்-விருப்பம்.  


மேல்