9. சேதிராயர் திருவிசைப்பா
28. கோயில்
286. | அறவ னேஅன்று பன்றிப் பின்ஏகிய மறவ னேஎனை வாதைசெய் யேல்எனும் சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர்எனும் பிறைகு லாம்நுதற் பெய்வளையே. (8) |
286. அறவன் - அற வடிவினன். மறவன்-வேடன். ‘‘அறவன்,மறவன்’’ என்பன, ‘தன்னை அடைந்தாரை இடுக்கண் நீக்கிக் காப்பவன்’ என்னும் குறிப்புணர்த்தி நின்றன. வாதை-துன்பம். பிறை குலாம் நுதல்-பிறை விளங்குவது போலும் நெற்றியையுடைய. பெய் வளை-இடப்பட்ட வளையினை உடையவள். ‘இவள் எப்பொழுதும் உம்மையே நினைந்து முறையிடுகின்றாள்; இவளது வருத்தத்தைப் போக்கீர்’ என்பது கருத்து. |