2. சேந்தனார் திருவிசைப்பா
6. திருவாவடுதுறை
59. | மாதி மணங்கம ழும்பொழில் மணிமாட மாளிகை வீதிசூழ் சோதி மதிலணி சாந்தைமெய்ச் சுருதி விதிவழி யோர்தொழும் ஆதி யமரர் புராணனாம் அணிஆ வடுதுறை நம்பிநின்ற நீதி யறிகிலள், பொன்னெடுந் திண்டோள் புணர நினைக்குமே. (2) |
59. மாதி - மாது உடையவள், தலைவி. மாது - அழகு. “மாதி” என்றது “அறிகிலள்” என்பதனோடு இயையும். மெய்ச் சுருதி - உண்மை நூலாகிய வேதம். அதன் விதிவழியோர், அந்தணர். புராணன் - பழையோன்; என்றது, ‘முற்பட்டவன்’ எனப் பொருள்தந்து. அமரர்களையும் தோற்றுவித்தோனாதல் குறித்தது “நீதி” என்றது பெருமையை; ‘அதனை அறியாதவளாய் அவன் திண் .தோள்களைப் புல்ல நினைத்தாள்: இது கூடுவதோ’ என்றபடி. இக்கூற்றால், இவ்வாசிரியர்க்கு இறைவன் திருவருட்கண் உள்ள வேட்கை மிகுதி புலனாகும். “அறிகிலள்” என்றது முற்றெச்சம். |