சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

9. கோயில்


96. 
  

 நீலமே கண்டம்; பவளமே திருவாய் ;
   நித்திலம் நிரைத்திலங் கினவே
போலுமே முறுவல் ; நிறையஆ னந்தம்
   பொழியுமே   திருமுகம்   ;  ஒருவர் 
கோலமே  அச்சோ  !அழகிதே யென்று
   குழைவரே கண்டவர் ; உண்ட
தாலமே; ஆகில் அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.                  (6)
 

96.  நீலம்-நீலரத்தினம், நித்திலம்-முத்து.    நிரைத்து-வரிசைப்பட
வைக்கப்பட்டு.    முறுவல்-நகைப்பு.    ‘‘திருமுகம்’’    என்றதன்பின்,
‘இவ்வாறாகலின்’   என்னும்   சொல்லெச்சம்  வருவிக்க.  ‘‘கோலமே,
அழகிதே’’  என்ற  ஏகாரங்களில்  முன்னது  அசைநிலை  : பின்னது
தேற்றம்.    அச்சோ,    வியப்பிடைச்    சொல்,    குழைவர்-மனம்
உருகுவார்கள். 


மேல்