5. கண்டராதித்தர் திருவிசைப்பா
20. கோயில்
| 199. | களிவான்      உலகிற் கங்கை நங்கை காதலனே அருளென்
 றொளிமால் முன்னே வரங்கி டக்க
 உன்னடி யார்க்கருளும்
 தெளிவா ரமுதே தில்லை மல்கு
 செம்பொனின் அம்பலத்துள்
 ஒளிவான் சுடரே உன்னை நாயேன்
 உறுவதும் என்றுகொலோ!                           (5)
 
 | 
| 
 199.     களி  வான்  உலகு-களித்து        வாழ்தற்குரிய   வானுலகம்.‘அங்குள்ள கங்கை’ என்க. ‘பகீரதன் பொருட்டு வானுலகிலிருந்து       வந்த
 கங்கையைச்  சிவபெருமான்  சடையில் தாங்கினார்.’ என்பது        வரலாறு.
 ஒளி  மால்-அழகையுடைய  திருமால்.  முன்னே-உனது         திருமுன்பில்.
 வரம்  கிடக்க-வரம்  வேண்டிப்  பாடு கிடக்க. ‘அவனுக்கு       அருளாமல்
 அடியார்க்கு  அருளுகின்றாய்’  என்றபடி. தில்லைக்        கூத்தப்பெருமான்
 திருமுன்பில்   திருமால்   கிடந்த   கோலத்தில்  இருத்தல்         காண்க.
 ‘‘வரங்கிடந்  தான்தில்லை  யம்பல  முன்றிலம்  மாயவனே’’        என்றார்
 திருக்கோவையாரினும்     (86).          தெளிவுஆர்-  தெளிவுபொருந்திய.
 உறுவது-அடைவது.
 |