2. சேந்தனார் திருவிசைப்பா
6. திருவாவடுதுறை
| 59. | மாதி மணங்கம ழும்பொழில் மணிமாட மாளிகை வீதிசூழ்
 சோதி மதிலணி சாந்தைமெய்ச்
 சுருதி விதிவழி யோர்தொழும்
 ஆதி யமரர் புராணனாம்
 அணிஆ வடுதுறை நம்பிநின்ற
 நீதி யறிகிலள், பொன்னெடுந்
 திண்டோள் புணர  நினைக்குமே.                (2)
 
 | 
| 
 59.    மாதி - மாது உடையவள், தலைவி. மாது - அழகு. “மாதி”என்றது  “அறிகிலள்”  என்பதனோடு  இயையும்.  மெய்ச்   சுருதி      -
 உண்மை   நூலாகிய   வேதம்.   அதன்  விதிவழியோர்,  அந்தணர்.
 புராணன் - பழையோன்; என்றது, ‘முற்பட்டவன்’ எனப் பொருள்தந்து.
 அமரர்களையும்   தோற்றுவித்தோனாதல்  குறித்தது  “நீதி”  என்றது
 பெருமையை;  ‘அதனை  அறியாதவளாய் அவன் திண் .தோள்களைப்
 புல்ல   நினைத்தாள்:   இது   கூடுவதோ’   என்றபடி.  இக்கூற்றால்,
 இவ்வாசிரியர்க்கு  இறைவன்  திருவருட்கண்  உள்ள வேட்கை மிகுதி
 புலனாகும். “அறிகிலள்” என்றது முற்றெச்சம்.
 |