சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

11. திருமுகத்தலை


121. 
  

மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
   முகத்தலை யகத்தமர்ந் தினிய
பாலுமாய் அமுதாம் பன்னகா பரணன்
   பனிமலர்த் திருவடி யிணைமேல்
ஆலைஅம் பாகின் அனையசொற் கருவூர்
   அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவ ரெல்லாம்
   சிவபதம குறுகிநின் றாரே.                    (10)

திருச்சிற்றம்பலம்
 


121.     மூலம்-முதல். இறைவன் மூலமும், முடிவுமாதல் உலகிற்கு.
அவற்றைத்  தனக்கு  இலனாதலின்,  ‘‘முடிவிலா  முதலாய்’’ என்றார்.
இங்கு  ‘‘முதல்’’  என்றது,  ‘பொருள்’ என்னும் பொருட்டு. ஆலையம்
பாகு-கரும்பு    ஆலையிடத்து    உள்ள   பாகு.   அம்,  சாரியை.
‘சொல்லையுடைய  கருவூர்’  என்க. ‘கருவூரது மாலை’ என இயையும்.
சீலமா-ஒழுக்கமாக (கடமையாக)க் கொண்டு, ‘நிற்பார்’ என்பது, துணிவு
பற்றி,‘‘ நின்றார்’’ என இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.  


மேல்