7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
22. கோயில்
222. | செய்ய கோடுடன் கமல மலர்சூழ்தரு தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ வையம் உய்ய நின்று மகிழ்ந் தாடுசிற் றம்பலவன் செய்ய வாயின் முறுவலும் திகழுந்திருக் காதும் காதினின் மாத்தி ரைகளோ டைய தோடுமன்றே அடி யேனை ஆட் கொண்டனவே. (8) |
222. செய்ய கோடுடன்- நல்ல சங்குகளுடன் மாத்திரைகள்-சிறந்த சுருள்கள்; என்றது, குழையை. ஐய-அழகிய. இதனுள், ‘மகிழ்ந்து, அடி’ என்பன கூன். |
|