சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

24. கோயில்


239.

சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும்
   சாதி பலவுங்கொண்
டுந்தி யிழியும் நிவவின் கரைமேல்
   உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப் பதியுள்

   சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவம் கொட்ட நட்டம்
   நாதன் ஆடுமே.                          (4)
 


239. தழைப்    பீலி-தழைபோன்ற மயில் தோகை. சாதி  ஒருவகை
மரம்;   இதன்   காய்  சிறந்ததொன்றாகக்  கொள்ளப்படுதல்   அறிக.
கொண்டு-அகப்படக்  கொண்டு, உந்தி இழியும்-தள்ளி ஓடுகின்ற.  நிவா,
ஓர்   யாறு.   ‘கரைமேல்   விளங்கும்   தில்லை’   என    உரைக்க.
‘தில்லையாகிய   தெய்வப்பதி’   என்றவாறு.  ‘‘சிந்திப்பரிய’’   என்றது.
‘சிந்தனையுள் அடங்காத பெருமையை உடைய ’ என்றபடி.


மேல்