சொல்லகராதிச் சுருக்கம்

8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா

27. கோயில்


276.

முத்தர் முதுபகலே வந்தென்றன் இல்புகுந்து
பத்தர் பலியிடுக என்றெங்கும் பார்க்கின்றார்
சித்தர் கணம்பயிலும் தில்லைச்சிற் றம்பலவர
கைத்தலங்கள் வீசிநின் றாடுங்கால் நோக்காரே.       (9)
 


276. முத்தர்-இயல்பாகவே பாசங்கள் இல்லாதவர். முதுபகல்-முற்றிய
பகல்;  நண்பகல்.  பத்தர்  பலி  இடுக-அன்பராய்  உள்ளார்  பிச்சை
இடுவார்களாக.  எங்கும்-எனது  உருவம்  முழுதும்.  ‘இல்லில்  வந்து
என்னை  முழுதும் நோக்குதல் பற்றி இவர் நமக்கு அருளுவார் என்று
கருதி  யான்  இவர்  தம்  மன்றிற்குச்  சென்றால், என்னைச் சிறிதும்
கடைக்கணிக்கின்றிலர்’’   என்பாள்.   ‘‘இல்புகுந்து     பார்க்கின்றார்;
ஆடுங்கால்    நோக்கார்’’    என்றாள்.   ‘இஃது  இவர்   வஞ்சகச்
செயல்போலும்’  என்றவாறு. இறைவனது திருவருளைப்பெற விரைவார்
இறைவனை இங்ஙனம் கூறுதல் இயல்பு என்க.


மேல்