3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
| 104. | தெள்ளுநீ      றவன்நீ றென்னுடல் விரும்பும்; செவிஅவன் அறிவுநூல் கேட்கும்;
 மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் ; கண்கள்
 விமானமே நோக்கிவெவ் வுயிர்க்கும் ;
 கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே
 கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
 வள்ளலே, மணியம் பலத்துள் நின்றாடும்
 மைந்தனே என்னும்என் மனனே.                    (4)
 
 | 
| 
 104.     தெள்ளு - தெளிவாகிய ; வெண்மையான. ‘நீற்றவன்’ எனவருதலேயன்றி,    ‘நீறவன்’    என   வருதலும்        இலக்கணமேயாம்.
 இரண்டாவதன்  தொகையோடொப்பதாதலின்.      ‘‘கானக      நாடனை நீயோ
 பெரும்’’  (புறம்-5.)  ‘‘நாடன்  என்கோ  ஊரன்      என்கோ’’  (-  -49.)
 என்றாற்போல்வன   பலவற்றுள்ளும்   ‘நாடனை.  நாடன்’             முதலாக
 வருவன பலவுங்காண்க. ‘நீறவன்’ என்பது, ‘சிவன்’ என்னும்       அளவாய்
 நின்றது.‘‘என்’’  என்பது,  ‘‘செவி’’  முதலிய  பலவற்றோடும்       சென்று
 இயையும்.  அவன்  அறிவு  நூல்-அவனை அறியும் அறிவைத்       தரும்
 நூல்.  மெள்ள விளம்புதல்-செபித்தல். விமானம்-மூலத்தான       மாளிகை.
 வெவ்வுயிர்க்கும்-வெப்பமாக  மூச்செறியும்,   சோர்வுறுதலை        இனிது
 விளக்க,  மூக்கின் தொழிலாகிய  உயிர்த்தலைக்  கண்களுக்கு       ஏற்றிக்
 கூறினார். ‘பொழிற்கண்  என்பது, ’’பொழிற்கு’’ என உருபு      மயக்கமாய்
 வந்தது. என்னும்-என்று நினைக்கும்.
 |