7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
22. கோயில்
| 215. | மையல்      மாதொரு கூறன் மால்விடையேறி மான்மறி யேந்தி யதடங்
 கையன் கார்புரை யுங்கறைக்
 கண்டன் கனன்மழுவான்
 ஐயன் ஆரழல் ஆடு      வான்அணி
 நீர்வயல் தில்லை யம்பலத்தான்
 செய்யபாதம்      வந்தென் சிந்தை
 யுள்ளிடங் கொண்டனவே                            (1)
 
 | 
| 
 215.        மையல் மாது-காதலை உடைய பெண்டு; உமை - ‘காதலுக்குஇடமாய  பெண்டு’  என்றும்  ஆம். கார் புரையும் - மேகம்       போலும்.
 கறை - கறுப்பு. இதனுள், ‘‘கறை, சிந்தை’’      என்பவை கூன்.
 |