சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

8. கோயில்


84.

கண்பனி யரும்பக் கைகள் மொட்டித்தென்
   களைகணே ஓலமென் றோலிட்
டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத்
   தென்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
   பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பிற்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.               (5)
 

84.     மொட்டித்து - குவிந்து. களைகணே -பற்றுக்கோடானவனே.
தெளி  தேன்-தேன்  உண்மையைத் தெளிந்த வண்டுகள், ஆட-பறந்து
திரிய.  ‘சோலையது  சூழ் மொழுப்பில்’ என்க. சூழ் மொழுப்பு-பரவிய
மேலிடம்.


மேல்