3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
15. திருச்சாட்டியக்குடி
| 153. | பாந்தள்பூ      ணாரம் ; பரிகலங் கபாலம்; பட்டவர்த் தனம்எரு ; தன்பர்
 வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை ;
 மலைமகள் மகிழ்பெருந் தேவி ;
 சாந்தமும் திருநீ ; றருமறை கீதம் ;
 சடைமுடி ; சாட்டியக் குடியார்
 ஏந்தெழில் இதயங் கோயில் ; மா ளிகைஏழ்
 இருக்கையுள் இருந்தஈ சனுக்கே,                      (2)
 
 | 
| 
 153.          பாந்தள்-பாம்பு. பூண் ஆரம்-அணிகின்ற       இரத்தின வடம்.‘‘பரிகலம்  கபாலம்  ;       பட்டவர்த்தனம்  எருது  ;    சாந்தம்      திருநீறு’’
 என்றாற்போல,    ஏனையவற்றையும்,             ‘பூண்ஆரம்         பாந்தள்;
 மஞ்சனசாலை  கண்  ;       பெருந்தேவி மலைமகள் ;   கீதம் அருமறை ;
 முடி       சடை ; கோயில் மாளிகை இதயம்’ என  மாற்றிக்கொள்க. ‘இவை
 யெல்லாம்         உலகிற்    காணப்படாத         அதிசயங்கள்’     என்றபடி.
 பரிகலம்-உண்கலம்.              கபாலம்-         பிரமனது         தலைஓடு.
 பட்டவர்த்தனம்-அரச  விருது ;      பெருமையுடைத்தாகிய   யானையையே
 பட்டவர்த்தனமாகக்             கொள்ளுதல்             உலக            இயல்பு.
 ‘வார்ந்த-இடையறாதொழுகிய.  ‘‘வார்ந்த       கண்ணருவி’’  என்றாராயினும்,
 ‘வார்ந்த  அருவிக்       கண்’  என்பதே  கருத்து,  இடத்தைச்        சுட்டலே
 கருத்தாகலின்,   மஞ்சனசாலை-குளிக்கும்        இடம்.       பெருந்தேவி-
 அரசமாதேவி.        சாந்தம்-உடற்   பூச்சு.  கீதம்-தான்        பாடும்  பாட்டு.
 ‘சாட்டியக்குடியாரது        இதயம்’   என்க.  ஏந்து  எழில்        இதயம்-மிக்க
 எழுச்சியையுடைய  நெஞ்சு. ‘‘எழுச்சி’’      என்றது அன்பினை.  நெஞ்சிற்கு
 அழகு  தருவது       அன்பேயாகலின்,  அதனை  மாளிகைக்கு       அமைந்த
 அழகாகச்   சிலேடித்தார்.   கோயில்        மாளிகை-கோயிற்கண்  உள்ள
 கருவறை,
 |