3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
13. கங்கைகொண்ட சோளேச்சரம்
| 136. | ஐயபொட்      டிட்ட அழகுவா ணுதலும், அழகிய விழியும், வெண் ணீறும்,
 சைவம்விட் டிட்ட சடைகளும், சடைமேல்
 தரங்கமுஞ் சதங்கையுஞ் சிலம்பும்
 மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
 முகம்மலர்ந் திருகண்நீர் அரும்பக்
 கைகள்மொட் டிக்கும் என்கொலோ ! கங்கை
 கொண்டசோ ளேச்சரத் தானே.                      (4)
 
 | 
| 
 136.     ஐய பொட்டு-அழகிய திலகம். ‘அளக வாள்நுதல்’ என்பதுபாடம்  அன்று.  சைவம்-சிவ வேடம். சிவபெருமானுக்கு உரிய சிறப்பு
 அடையாளங்களுள்     சடை     சிறந்ததொன்றாதலின்,    ‘‘சைவம்
 விட்டிட்டசடைகள்’’  என்றார்.  நடனம்  செய்பவர்  காலில்  சதங்கை
 அணிதல்  இயல்பு  என்க. மொய் கொள்-சூழ்தலைக் கொண்ட. ‘‘எண்
 திக்கின்  கண்ணும்’  என  உருபு விரிக்க. ‘‘மலர்ந்து’’, ‘‘மொட்டிக்கும்’’
 எனச் சினை வினை முதல் மேல் நின்றன. இவ்வாறன்றி,       ‘‘தொண்டர்’’
 என்றதில்  ஆறாவது  விரித்து,  ‘‘மலர்ந்து’’ என்பது, ‘மலர’ என்பதன்
 திரிபு   என்றலும்   ஆம்.  என்னோ-காரணம்  யாதோ.  ‘முன்னைத்
 தவத்தின்  பயனாகக்  கிடைத்த அன்பே காரணம்’ என்பதாம். கொல்,
 அசைநிலை.
 |