2. சேந்தனார் திருவிசைப்பா
7. திருவிடைக்கழி
| 73. | குணமணிக் குருளைக்      கொவ்வைவாய் மடந்தை படுமிடர் குறிக்கொளா தழகோ
 மணமணி மறையோர் வானவர் வையம்
 உய்யமற் றடியனேன் வாழத்
 திணமணி மாடத் திருவிடைக் கழியில்
 திருக்குரா நீழற்கீழ் நின்ற
 கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன்
 கணபதி பின்னிளங்  கிளையே.                      (5)
 
 | 
| 
 73.       குண மணிக் குருளை-நற்பண்பினையுடைய சிறந்த வீரமுடையசிறுவன்;  முருகன். ‘‘குருளை’’ என்றது சிங்கக் குட்டியை. இஃது உவம
 ஆகுபெயராய், அதுபோலும் சிறு வனைக்       குறித்தது. ‘குறிக்கொளாதது
 என்பது   குறைந்து         நின்றது.       மணம்  அணி  மறையோர்- மங்கல
 விழாக்களை    அழகு    படுத்துகின்ற       அந்தணர்.     மறையோரை
 வையத்தாரினின்று வேறு பிரித்தது,       சிறப்புப்      பற்றி.    ‘வாழ   நின்ற’
 என   இயையும்.   ‘திண்ணம்’   என்பது இடைக்குறைந்து,  ‘‘திணம்’’
 என  வந்தது,  ‘திண்மையாகிய மாடம்’ என்க. கண மணி-கூட்டமாகிய
 இரத்தினங்களையுடைய.       இளங்கிளை - தம்பி.
 |