3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
110. | அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர் அழகிய சடையும் வெண்ணீறும் சிந்தையால் நினையிற் சிந்தையுங் காணேன்; செய்வதென் ! தெளிபுனல் அலங்கற் கெந்தியா உகளுங் கெண்டைபுண் டரீகங் கிழிக்குந்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர் வந்தநாள் மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தனே அறியும்என் மனமே. (10) |
110. அந்தியில் பிறை-மாலைக் காலத்தில் தோன்றுகின்ற சந்திரன். சிந்தையை விட்டு அவனிடத்தே அடங்குதலால், சிந்தை காணப்படாதாயிற்று. ‘ஏனைய கருவிகளையேயன்றி, எனப் பொருள் தருதலின், ‘‘சிந்தையும்’’ என்னும் உம்மை, இறந்தது தழுவிய எச்சம். அலங்கல்-அசைவின்கண். கெந்தியா (கந்தியா)-மணம் வீசி, புண்டரிகம்-.தாமரை மலர்.‘‘கெந்தியா உகளும் கெண்டை புண்டரிகம் கிழிக்கும்’’ என்றாராயினும்‘புண்டரிகம் கிழிக்கும் கெண்டை கெந்தியா உகளும்’ என்பது கருத்தென்க. கெந்தித்தல். புண்டரிகத்தைக் கிழித்தலால் உண்டாயிற்று. வந்த நாள்-சென்று நான் அவனைக் கண்ட நாளில் (வேபட்ட என் மனநிலையை அவன் ஒருவனே அறிவான் என்க.) |