சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

11. திருமுகத்தலை


112. 
  

 புவனநா யகனே ! அகவுயிர்க் கமுதே !
   பூரணா ! ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே ! பணிசெய்வார்க் கிரங்கும்
   பசுபதீ ! பன்னகா பரணா !
அவனிஞா யிறுபோன் றருள்புரிந் தடியேன்
   அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
   தனியனேன் தனிமைநீங் குதற்கே.               (1)
 

112.     புவனம்-உலகம் ; இவ்வஃறிணை இயற்பெயர்    பன்மைப்
பொருட்டாய், ‘எல்லா உலகங்கட்கும், எனப் பொருள் தந்தது. இவ்வாறு
வருவதனை, ‘சாதியொருமை’ என்ப. அகம்-இடம்; அக உயிர் -உன்னை
அடைந்த   உயிர்கள்;   முத்தான்மாக்கள்,  ‘அவனிக்கு’  என  உருபு
விரித்து,  உலகிற்கு  இருளை  நீக்கி ஒளியைத் தரும் ஞாயிறுபோன்று
மருளை  நீக்கி  அருளை வழங்கி, என உரைக்க.  பசுபதி-உயிர்கட்குத்
தலைவன். பன்னக ஆபரணன்- பாம்பாகிய அணிகளை   யுடையவன ;
தனியனேன்  -  துணை  இல்லாதேன். தனிமை நீங்குதற்கு- அந்நிலை
நீங்குமாறு ; என்றது, யான் துணை பெற்று உய்யும்படி’ என்றவாறு.  


மேல்