சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

15. திருச்சாட்டியக்குடி


153.

பாந்தள்பூ ணாரம் ; பரிகலங் கபாலம்;
   பட்டவர்த் தனம்எரு ; தன்பர்
வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை ;
   மலைமகள் மகிழ்பெருந் தேவி ;
சாந்தமும் திருநீ ; றருமறை கீதம் ;
   சடைமுடி ; சாட்டியக் குடியார்
ஏந்தெழில் இதயங் கோயில் ; மா ளிகைஏழ்
   இருக்கையுள் இருந்தஈ சனுக்கே,                 (2)
 

153.     பாந்தள்-பாம்பு. பூண் ஆரம்-அணிகின்ற  இரத்தின வடம்.
‘‘பரிகலம்  கபாலம்  ;  பட்டவர்த்தனம்  எருது  ;    சாந்தம் திருநீறு’’
என்றாற்போல,    ஏனையவற்றையும்,        ‘பூண்ஆரம்    பாந்தள்;
மஞ்சனசாலை  கண்  ;  பெருந்தேவி மலைமகள் ;   கீதம் அருமறை ;
முடி  சடை ; கோயில் மாளிகை இதயம்’ என  மாற்றிக்கொள்க. ‘இவை
யெல்லாம்    உலகிற்    காணப்படாத    அதிசயங்கள்’     என்றபடி.
பரிகலம்-உண்கலம்.         கபாலம்-    பிரமனது         தலைஓடு.
பட்டவர்த்தனம்-அரச  விருது ; பெருமையுடைத்தாகிய   யானையையே
பட்டவர்த்தனமாகக்        கொள்ளுதல்        உலக       இயல்பு.
‘வார்ந்த-இடையறாதொழுகிய.  ‘‘வார்ந்த  கண்ணருவி’’  என்றாராயினும்,
‘வார்ந்த  அருவிக்  கண்’  என்பதே  கருத்து,  இடத்தைச்   சுட்டலே
கருத்தாகலின்,   மஞ்சனசாலை-குளிக்கும்   இடம்.       பெருந்தேவி-
அரசமாதேவி.   சாந்தம்-உடற்   பூச்சு.  கீதம்-தான்   பாடும்  பாட்டு.
‘சாட்டியக்குடியாரது   இதயம்’   என்க.  ஏந்து  எழில்   இதயம்-மிக்க
எழுச்சியையுடைய  நெஞ்சு. ‘‘எழுச்சி’’ என்றது அன்பினை.  நெஞ்சிற்கு
அழகு  தருவது  அன்பேயாகலின்,  அதனை  மாளிகைக்கு  அமைந்த
அழகாகச்   சிலேடித்தார்.   கோயில்   மாளிகை-கோயிற்கண்  உள்ள
கருவறை,  


மேல்