சொல்லகராதிச் சுருக்கம்

4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா

18. திருவாரூர்


184.
  

பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
   பருகுதோ றமுதமொத் தவர்க்கே
தித்தியா இருக்கும், தேவர்காள், இவர்தம்
   திருவுரு இருந்தவா பாரீர் !
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
  தனிமுழு முதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி

   விடங்கராய் நடங்குலா வினரே.                 (2)

திருச்சிற்றம்பலம்
 


184.  ‘‘தேவர்காள்’’ என்பதனை முதலிற்கொண்டு, அதன் பின்னர்ப்
பின்னிரண்டடிகளைக்  கூட்டியுரைக்க.  ‘உணர்வோர் பருகுதோறு’ என
இயையும்.   ‘வாய்மடுத்துப்   பருகுதல்,  என்பது   பான்மை  வழக்கு.
‘‘அவர்க்கே’’ என்ற பிரிநிலை ஏகாரம், பிறர்க்குத் தித்தியாமை குறித்து
நின்றது.  தித்தியா-தித்தித்து.  இருந்தவா-இருந்தவாற்றை.  தேவர்களை
நோக்கிக் கூறினார். ‘யாம் திவ்விய தேகமும் (ஒளியுடம்பு) உடையோம்;
அதனால்   தேவராய்  நிற்கின்றோம்  எனச்  செருக்குகின்ற  உங்கள்
உருவத்தின்  ஒளி இவரது திருவுருவத்தின் ஒளிக்கு எட்டுணையேனும்
போதாமையைக்  கண்டு  அடங்குமின்கள்’  என்றற்கு.  இனி வருவன
அத்திருவுருவத்தின்     பெருமைகள்.        சத்தியாய்-அம்மையாய்.
சிவமாய்-அப்பனாய்,    தனிமுழு   முதலாய்-அவ்வாறு   நிற்றலானே
உலகிற்கு  ஓர் ஒப்பற்ற தலைவனாய், அதற்கு ஓர் வித்துமாய்-தம்மால்
படைக்கப்பட்ட   அவ்வுலகத்தின்  தோற்றத்திற்கும்,  ஒடுக்கத்திற்கும்
நிலைக்களமாய். 


மேல்