சொல்லகராதிச் சுருக்கம்

5. கண்டராதித்தர் திருவிசைப்பா

20. கோயில்


195.

மின்னார் உருவம் மேல்வி ளங்க
   வெண்கொடி மாளிகைசூழப்
பொன்னார் குன்றம் ஒன்றுவந்து
   நின்றது போலும்என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
   தென்றில்லை யம்பலத்துள்
என்னா ரமுதை எங்கள் கோவை
   என்றுகொல் எய்துவதே !                      (1)
 

195.     மின்னார்-பெண்கள்.  மேல்-மாடங்களின்  மேல் நிலையில்,
‘‘விளங்க’’  என்பது,  ‘‘சூழ’’  என்பதனோடு  முடிய,   ‘‘சூழ’’ என்பது,
‘‘நின்ற’’     என்பதனோடு     முடியும்.     பொன்னார்     குன்றம்,
பொன்னம்பலத்திற்கு உவமை. ‘‘என்னா’’ என்பதற்கு, ‘மருளும்’  என்று
ஒருசொல்  வருவித்து  முடித்து,  ‘அதனை’  மருளும் அம்பலம்’  என
இயைத்து முடிக்க, ‘‘தென்னா’’ என்பது ஒலிக்குறிப்பு.  


மேல்