சொல்லகராதிச் சுருக்கம்

5. கண்டராதித்தர் திருவிசைப்பா

20. கோயில்


197.

முத்தீ யாளர் நான்ம றையர்
   மூவா யிரவர்நின்னோ
டொத்தே வாழுந் தன்மை யாளர்
   ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டு பாடுந்
   தென்றில்லை யம்பலத்துள்
அத்தாவுன்றன் ஆடல் காண
   அணைவதும் என்றுகொலோ !                 (3)
 

197.     ‘இரணிய  வன்மன்’  என்னும்  அரசன்,    வியாக்கிரபாத
முனிவருடைய   கட்டளையின்படியே,   ‘கங்கை   யமுனை’  என்னும்
இருநதிகளின்  இடையேயிருந்த  முனிவர் மூவாயிரவரைத்  தில்லைக்கு
அழைத்து  வந்து எண்ணிக்காட்டிய பொழுது, ஒருவர்   குறைய அவன்
திகைத்து   வருந்துதலும்,   தில்லைக்  கூத்தப்பெருமான்,    ‘இவர்கள்
எம்மையொப்பார்கள்;   நாமும்   அவர்களை   யொப்போம்;    நாம்
அவர்களில்   ஒருவரானோம்;  வருந்தற்க’  என்று   அருளிச்செய்தார்
என்பது  தில்லை  மூவாயிரவரைப்பற்றிய வரலாறு ஆதலின்,  அவரை,
‘‘நின்னோடு ஒத்தே வாழும் தன்மையாளர்’’ என்றார்.  இவ்வரலாற்றைக்
கோயிற்  புராணத்தால்  அறிக. ‘தில்லைவாழந்தணர்  ஓதுகின்ற நான்கு
வேதங்களை வண்டுகள் பாடும்’ என்றவாறு.  


மேல்