சொல்லகராதிச் சுருக்கம்

6. வேணாட்டடிகள் திருவிசைப்பா

21. கோயில்


214.

பாவார்ந்த தமிழ்மாலை பத்தரடித் தொண்டன்எடுத
தோவாதே அழைக்கின்றான் என்றருளின் நன்றுமிகத்
தேவே ! தென் திருத்தில்லைக் கூத்தாடீ ! நாயடியேன்
சாவாயும் நினைக்காண்டல் இனியுனக்குத் தடுப்பரிதே.  (10)

திருச்சிற்றம்பலம்
 


214. மூன்றாவது     அடிமுதலாகத்   தொடங்கி,     ‘‘தடுப்பரிது’’
என்பதன்பின், ‘ஆதலின்’ என்னும் சொல்லெச்சம் வருவித்து  உரைக்க.
பா  ஆர்ந்த-பாட்டாய்ப்  பொருந்திய.  ‘பா ஆர்ந்த மாலை’  எனவும்,
‘மாலை   எடுத்து  அழைக்கின்றான்’  எனவும்  இயையும்.   அருளின்
இப்பொழுதே  அருள்செய்தால்;  என்றது,  ‘காட்சி  கொடுத்தருளினால்’
என்பதாம்.  ‘மிக  நன்று’  என்க.  ‘நாயடியேன் நினைக்  காண்டலைச்
சாவாயும்  தடுப்பு  உனக்கு  இனி அரிது’ என மாறிக் கூட்டுக. ‘‘இனி’’
என்றது,  ‘யான்  ஓவாதே அழைப்பதான பின்பு’ என்றபடி.  ‘இறைவன்
தன்னைப்  பன்னாள்  அழைப்பவர்க்கு  என்றாயினும்   எதிர்ப்படுதல்
கடன்’    (திருமுறை-4.112.9.).   ஆதலாலும்,   இறக்கும்   பொழுதும்
எதிர்ப்படாதொழியின் கூற்றுவன் வந்து எதிர்ப்படுவானாகலின்,  அவன்
வாராதவாறு     அப்பொழுது    ஒரு    தலையாக    எதிர்ப்படுதல்
வேண்டுமாகலானும்   இவ்வாறு   கூறினார்.   இதனால்,   இறைவனது
காட்சியைக் காண இவருக்கிருந்த வேட்கை மிகுதி புலனாகும்.  


மேல்