7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
22. கோயில்
215. | மையல் மாதொரு கூறன் மால்விடை யேறி மான்மறி யேந்தி யதடங் கையன் கார்புரை யுங்கறைக் கண்டன் கனன்மழுவான் ஐயன் ஆரழல் ஆடு வான்அணி நீர்வயல் தில்லை யம்பலத்தான் செய்யபாதம் வந்தென் சிந்தை யுள்ளிடங் கொண்டனவே (1) |
215. மையல் மாது-காதலை உடைய பெண்டு; உமை - ‘காதலுக்கு இடமாய பெண்டு’ என்றும் ஆம். கார் புரையும் - மேகம் போலும். கறை - கறுப்பு. இதனுள், ‘‘கறை, சிந்தை’’ என்பவை கூன். |