7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
22. கோயில்
219. | பந்த பாச மெலாம்அ றப்பசு பாச நீக்கிய பன்மு னிவரோ டந்தணர் வணங்கும் அணி யார்தில்லை யம்பலவன் செந்த ழல்புரை மேனியுந் திகழுந் திருவயிறும் வயிற்றினுள் உந்தி வான்சுழிஎன் உள்ளத் துள்ளிடங் கொண்டனவே. (5) |
219. ‘‘பந்த பாசம்’’ என்றது, செயற்கையாகிய மாயை கன்மங்களையும், ‘‘பசு பாசம்’’ என்றது இயற்கையாகிய ஆணவத்தையும் குறித்தன. அற-அறுமாறு. ‘‘பசு பாசம்’’ என்னும் ஆறாவதன் தொகை வடநூல் முடிபு. ‘‘சுழி’’ என்பதில் எண்ணும்மை தொகுக்கப்பட்டது. இதனுள், ‘‘அணி, உள்ளத்து’’ என்பன கூன். |