சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

22. கோயில்


223.

செற்று வன்புரந் தீயெழச்சிலை
   கோலி ஆரழல் ஊட்டினான் அவன்
எற்றி மாமணிகள் எறி
   நீர்த்தில்லை யம்பலவன்
மற்றை நாட்ட மிரண்டொ டுமல
   ருந்திரு முகமும் முகத்தினுள்
நெற்றி நாட்டமன்றே நெஞ்சு
   ளேதிளைக் கின்றனவே.                     (9)
 


223.    செற்று- சினந்து. சிலை-வில். கோலி-வளைத்து. ‘‘அவன்’’
என்பது  பகுதிப்பொருள்  விகுதி.  நாட்டம்-கண், ‘‘நெற்றி  நாட்டம்’’
என்பதில்     எண்ணும்மை   தொகுக்கப்பட்டது.  திளைக்கின்றன -
உலாவுகின்றன.


மேல்