7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
25. கோயில்
254. | சேர்வன்கொ லோஅன்னைமீர் திக ழும்மலர்ப் பாதங்களை ஆர்வங் கொளத்தழுவி அணி நீறென் முலைக்கணியச் சீர்வங்கம் வந்தணவுந் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத் தேர்வங்கை மான்மறியன் எம் பிரான்போல் நேசனையே. (8) |
254. ‘அன்னைமீர், என் நேசனை, அவன் அணி நீற்றை என் முலைக்கு அணியுமாறு, அவன் மலர்ப் பாதங்களைத் தழுவிச் சேர்வன்கொலோ’ எனக் கொண்டு கூட்டுக. ‘‘அன்னைமீர்’ என்றது, கைத் தாயரை. அணி-அழகு. பிறராயின் சந்தனகளபங்களைப் பூசிச் சேர்வர் இவன் திருநீற்றையே பூசிச் சேர்வான். ஆதலின், ‘‘அணிநீறு அணிய’’ என்றாள். வங்கம் மரக்கலம். ஏர்வு-எழுச்சி போல், அசைநிலை. ‘புவனேசன் என்பது, போனேசன் எனமருவிற்று’ என்பாரும், பிற உரைப்பாரும் உளர். |