சொல்லகராதிச் சுருக்கம்

8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா

27. கோயில்


270.

ஒட்டா வகைஅவுணர் முப்புரங்கள் ஓர் அம்பால்
பட்டாங் கழல்விழுங்க எய்துகந்த பண்பினார்
சிட்டார் மறைஓவாத் தில்லைச்சிற் றம்பலவர்
கொட்டா நடமாடக் கோல்வளைகள் கொள்வாரே.     (3)
 


270. ஒட்டா வகை அவுணர்-பொருந்தாத வகைமையை (பகைமைக்
குணத்தை)  உடைய  அசுரர்.  ‘ஓர்  அம்பால் எய்து’ என இயையும்,
‘அழல்   பட்டு   விழுங்க’   என   மாற்றுக.  ஆங்கு,  அசைநிலை.
உகந்த-தேவர்களை   விரும்புகின்ற.   ‘சிட்டம்’   என்பதன்  ஈற்றில்
அம்முக்குறைந்து   நின்றது.   சிட்டம்-உயர்வு   :   கொட்டு  ஆம்
நடம்-மத்தளம்   முதலியவற்றின்   முழக்கம்   பொருந்திய  நடனம்.
ஆட-ஆடுதலால்.    ‘ஆடி’    எனப்   பாடம்   ஓதுதல்  சிறக்கும்.
‘கொடியோரை அழித்து நல்லோரை விரும்பிக் காக்கும் பண்புடையார்,
என் கோல்வளைகளைக் கொள்வார் ; இது தக்கதோ’ என்றபடி.


மேல்